கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.27 கும்பாபிஷேகம் 


கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான  யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 22 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரையில் 5.5 ஏக்கர் நிலத்தல் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையை போன்று கன்னியாகுமரியில் எழுந்தருளி உள்ள இந்த கோவிலிலும் பிரம்மோற்சவம் ,ரத உற்சவம் தீர்த்தவாரி ,சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை ,சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குமரி வெங்கடாசலபதி கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் அம்பாள் சன்னதியும், வெங்கடாசலபதி எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன.

கோவிலின் கீழ்ப்பகுதியில் இரண்டு ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல அன்னதான கூடம் தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.  இங்கு வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 

இதனையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது கொடிமரத்தில் நேற்று காலையில் செம்புத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 யாக குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கப்பட்டது.

 27ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது அன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



Leave a Comment