2026 சபரிமலை மகரஜோதி மற்றும் மண்டல பூஜை தேதிகள் அறிவிப்பு


2026 சபரிமலை மகரஜோதி மற்றும் மண்டல பூஜை தேதிகள் அறிவிப்பு

சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலின் 2025-2026-ம் ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு கால அட்டவணையைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ளது. இதன்படி, மண்டல பூஜை பெருவிழாவிற்காக 2025 நவம்பர் 15 அன்று மாலை நடை திறக்கப்பட்டு, நவம்பர் 16 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த 41 நாட்கள் விரத காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை 2025 டிசம்பர் 27-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்று அன்றிரவு நடை அடைக்கப்படும்.

பின்னர், மகரவிளக்கு உற்சவத்திற்காக 2025 டிசம்பர் 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் நடை திறக்கப்படும். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் 2026 ஜனவரி 14-ம் தேதி (புதன்கிழமை) மாலை நிகழும். அன்றைய தினம் பந்தளம் மன்னர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் புனித 'திருவாபரணங்கள்' ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும்;

அந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மகரஜோதி மூன்று முறை காட்சியளிக்கும். இதனை சன்னிதானம், பாண்டிதாவலம் மற்றும் புல்மேடு போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் தரிசிக்கலாம். இறுதியாக, 2026 ஜனவரி 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோயில் நடை மூடப்பட்டு பூஜைகள் நிறைவடையும்.



Leave a Comment