ஐயப்ப பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவு.....


சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய 50 ஆண்டுகளாக வரும் பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவுசெய்துள்ளது. 50 ஆண்டுகளாக சபரிமலை வருவோர் தங்களை பற்றிய விவரங்களை தேவசம் போர்டுக்கு பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக் மண்டல பூஜையின் போது தேவசம் போர்டு சார்பில் பொன்னாடை போர்த்தி சபரிமலை ஐயப்பன் உருவச்சிலை வழங்கி கவுரவிக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Leave a Comment