வேண்டுதல்கள் நிறைவேற எளிய முறை!


நமது வேண்டுதல்கள் நிறைவேற இறைவனை வணங்குகிறோம். சில சமயங்களில் இது விரைவில் நிறைவேறலாம், சில சமயங்களில் தாமதமாகலாம். ஆனால், எளிமையான வழிபாட்டால் வேண்டுதல்களை விரைவாக அடைய முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த தெய்வம் ஆஞ்சநேயர். வலிமையும் ஆற்றலும் மிக்க இவர், ராம நாமத்தால் திருப்தியடைபவர். சனி பகவானின் அதிபதியாகத் திகழ்ந்து, ஏழரை சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தோஷங்களை நீக்குபவர். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கினால், சனி தோஷங்களின் தீவிரம் குறையும், பிரச்சினைகள் தீரும்.

எளிய வழிபாடு முறை

  1. காலையில் குளித்து, யாருடனும் பேசாமல், வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றவும்.
  2. ஒரு மஞ்சள் நூலில் 108 வெற்றிலைகளை மாலையாகக் கட்டுங்கள். ஒவ்வொரு வெற்றிலையையும் கட்டும்போது உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து கூறவும்.
  3. மாலையை ஆஞ்சநேயர் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அவருக்கு சாற்றவும்.
  4. கடுகு எண்ணெயில் இரண்டு தீபங்கள் ஏற்றி, “ராமா ராமா” என 11 முறை கூறி ஆஞ்சநேயரை வலம் வரவும்.
  5. வழிபாடு முடியும் வரை யாருடனும் பேசாமல், வேண்டுதலில் கவனமாக இருங்கள்.

வழிபாட்டிற்கு பிறகு பிறருடன் பேசலாம். இந்த எளிய வழிபாட்டைசனிக்கிழமையில் செய்தால், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும்.



Leave a Comment