காசி கால பைரவர்: இதை செய்தால் நல்ல காலம் பிறக்கும்!


காசியில் உள்ள கால பைரவர் சன்னதி உலகப் புகழ் பெற்றது. காசிக்குச் செல்பவர்கள், இரவு நடைபெறும் கால பைரவர் பூஜையை கண்டு திரும்பாமல் வெளியேறுவதில்லை. கால பைரவர், காசி நகரின் சேனாதிபதியாக விளங்குகிறார். காசியில் மரணிப்பவர்களுக்கு யம பயம் இல்லை; யமனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரமும் இல்லை. காலனின் அதிகாரத்தைப் பெற்றவர்கள் கால பைரவர் என அழைக்கப்படுகின்றனர்.


பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட பைரவர், காசி எல்லையில் கால் வைத்தபோது, சிவபெருமான் தோன்றி தோஷத்தை நீக்கி, காசியின் காவல் தெய்வமாக அருளினார். இன்றும் காசி, பைரவர்களின் ஆளுகையில் உள்ளது. நகர எல்லையை எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காக்கின்றனர்.
காசி அனுமன் காட்டில் ரிஷப வாகனத்தில் உருபைரவர் தென்கிழக்கிலும், ஸ்ரீதுர்க்கை கோயிலில் மயில் வாகனத்தில் சண்ட பைரவர் தெற்கிலும், விருத காலர் கோயிலில் அன்ன வாகனத்தில் அசி தாங்க பைரவர் கிழக்கிலும், லாட் பஜாரில் யானை வாகனத்தில் கபால பைரவர் வடமேற்கிலும், ஸ்ரீகாமாட்சி கோயிலில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கிலும், திரிலோசன சங்கமத்தில் நாய் வாகனத்தில் சம்ஹார பைரவர் வடகிழக்கிலும், பூத பைரவரில் சிங்க வாகனத்தில் பீஷண பைரவர் வடக்கிலும் எழுந்தருளி எல்லைகளைப் பாதுகாக்கின்றனர்.


எனவே, காசியை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பொருளும் கால பைரவரின் அனுமதி பெற வேண்டும். காசியில் மரணித்தவர்களுக்கு யம தண்டனை இல்லை; பைரவ விசாரணை மட்டுமே உண்டு. நகர எல்லையில் யமனும் திரும்புவார் என்பது ஐதீகம். இதனால், காசி கால பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு, யம பயத்தை நீக்கி, நல்வாழ்வு தருகிறது.



Leave a Comment