ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா


காரைக்காலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயர் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள், உற்சவர் ஸ்ரீகோதண்டராமர் மற்றும் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.

இதில் பால்,தயிர், மஞ்சள், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், திரவியப்பொடி மற்றும் பலவகை பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment