ஞான வழியே சித்தியைக் காட்டும்


- "மாரி மைந்தன்" சிவராமன் 

 

திருமந்திரம் - எளிய விளக்க உரை  - 6

மாரி மைந்தன் சிவராமன்

விதிவழி  அல்லதிவ் வேலை உலகம்

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவனாமே.

(திருமந்திரம் - கடவுள் வாழ்த்து)

இறைவன் ஜோதியாக விளங்குபவன் அருட்பெருஞ்ஜோதி அவனே.

அவன் 
விதித்த விதி வழி தான் உலகம் சுழல்கிறது.
தவிர வேறு வகையில் அல்ல.

மனிதர்கள் அடையும் 
இன்பமும் 
துன்பமும் 
அவன் 
வகுப்பதே அன்றி வேறு அல்ல.

எனவே 
நித்தமும் 
அவனை உள்ளத்தில் உணர்ந்து துதியுங்கள்.

அதனால் 
மட்டுமே 
ஜோதியாக விளங்கும் 
ஈசன் 
சூரியன் போல் இருளகற்றி 
ஞானம் 
அடையச் செய்து 
இறவாப் பேரின்பத்தை நிரந்தரமாக்கி 
சித்தி எனும்
பேறை அருள்வான்.

விதி வழி என்பது கிரியை நெறி.
துதி வழி என்பது தோத்திர நெறி.
பதி வழி என்பது ஞானநெறி.
 



Leave a Comment