சிவனே சிவம் : திருமந்திரம் எளிய விளக்க உரை


- "மாரி மைந்தன்" சிவராமன்

திருமந்திரம் - 1

ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள் 
நின்றனன் மூன்றினுள் நன்கு உணர்ந்தான் ஐந்து 
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்ச் 
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

(திருமந்திரம் -
கடவுள் வாழ்த்து - 1)

விளக்க உரை


ஒன்றாய் 
ஆதிசிவனாய்
சிவமாய் 
உள்ளவன் 
அவனே.

அம்மை
அப்பன் 
என
இரண்டானவன் அவனே.

அருவம்
உருவம் 
அருவுருவம் 
என்று 
மூன்றாயிருப்பவன் அவனே.

சரியை
கிரியை
யோகம்
ஞானம் 
ஆகிய 
நான்கையும் 
உணர்த்துபவன் அவனே.

படைத்தல் 
காத்தல் 
அழித்தல் 
அருளல் 
மறைத்தல் 
என்னும் ஐந்தொழில்களையும் ஆற்றுபவன்
அவனே.

ஓருயிர் முதல் 
ஆறுயிர் வரை 
அனைத்து உயிர்களுக்கும் 
ஆதார நாயகன் அவனே.

 

மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம்
அனாகதம் 
விசுத்தி 
ஆக்ஞா 
பிரமந்தரம்
முதலான 
ஏழு ஆதாரங்களாயிருந்து இயக்குபவனும் அவனே. 

 

தன்மயமாதல் 
தூய உடலினன் ஆதல்
இயற்கை உணர்வு அடைதல் 
முற்றும் உணர்தல் பற்றற்று இருத்தல் பேரருள் நோக்கு முடிவில்லாமை
எல்லையில்லாமை ஆகிய 
எண் குணத்தான் அவனே.

அவனே சிவன்.

சிவனே சிவம். 

ஆம்...
சிவமே சிவன்.

திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களின் 
கருவும் 
சுருக்கமும் 
விளக்கமும் 
இதுவே.



Leave a Comment