கடன் தீர எளிய ஆன்மீக பரிகாரம்: மா இலை மந்திரம்


கடன் சுமையால் தவிக்கிறவர்களுக்கு எளிய ஆன்மீக பரிகாரம் ஒரு வழிகாட்டியாக அமையும். கடனை அடைக்க சொத்து, நகை விற்பது ஒரு வழியாக இருந்தாலும், எந்த வழியுமின்றி தவிப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த பரிகாரத்துக்கு ஒரு மா இலை, உப்பு தண்ணீர் மட்டுமே தேவை. வீட்டில் கிழக்கு பார்த்து அமர்ந்து, ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து உப்பு தண்ணீர் தயாரிக்கவும்.

பிறகு, ஒரு மா இலையில் ஸ்கெட்ச் பேனாவால் உங்கள் கடன் தொகையை எழுதுங்கள், உதாரணமாக, “5 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” என்று. கருப்பு நிற பேனாவைத் தவிர, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு நிற பேனாக்களை பயன்படுத்தலாம்.இந்த இலையை கையில் பிடித்து, கடன் தீர வேண்டும் என முழு நம்பிக்கையுடன் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யவும்.

பின்னர், ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கை ஏற்றி, மா இலையை நெருப்பில் பொசுக்கி, அதன் சாம்பலை உப்பு தண்ணீரில் கரைத்து, கால் படாத மண் பாங்கான இடத்தில் கொட்டவும். இந்த பரிகாரத்தை தினமும் அல்லது ஞாயிறு காலையில் செய்யலாம். 48 நாட்களில் கடன் தீர ஒரு வழி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் உறுதியளிக்கின்றனர்.



Leave a Comment