ஸ்ரீரங்கம் கோயிலில் இ-உண்டியல் சேவை ....


பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புதிதாக இ-உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்கள் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பக்தர்கள் நலன்கருதி கோயில் நிர்வாகம் சார்பில் இ-உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்தலாம். இதில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் குறைந்த பட்சம் ரூ.100 முதல் அதற்கு மேற்பட்ட தொகையை இந்த இயந்திரத்தில் டெபாசிட் செய்யலாம். அப்படி செய்யும் போது அதற்கான ரசீதும் அதிலேயே தானாக வழங்கப்படும். மேலும் இந்த இ-உண்டியல் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் டெபாசிட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் காணிக்கை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



Leave a Comment