அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்...


திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு வரும் 13 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெறும். அதன்படி வரும் நவம்பர் 13ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அன்னாபிகேஷம் நடைபெறுவதையொட்டி வரும் 13ம்தேதி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மாலை 6.01 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.50 கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் வாய்ப்புள்ளது.

 



Leave a Comment