"அ" எழுதிய குட்டீஸ்...


விஜயதசமி விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லி்ல் அ எழுதும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேபோல மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நர்சரி வகுப்புகளுக்கு இன்று மாணவர் சேர்க்கை இடம் பெற்றது. இதேபோல பல்வேறு வகையான படிப்புகளுக்கும், பயிற்சிகளுக்கும் இன்று சேர்க்கை நடத்தப்பட்டது. நெல்லில் அ மற்றும் ஓம் என ஆசிரியர் துணையுடன், பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து எழுதத் துவங்கினர். இதற்கு அட்சராப்பியாசம் என்று பெயர். சென்னையிலும் இன்று பல்வேறு பள்ளிகள், கோவில்கள்ல இந்த அட்சராப்பியாசம் மற்றும் வித்யாரம்பம் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 



Leave a Comment