கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்...


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீப திருவிழா முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவாக மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அன்று சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று மகாதீபத்தை தரிசிப்பார்கள்.

இந்த ஆண்டிற்கான தீப திருவிழா வருகிற டிசம்பர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12-ந் தேதி மகா தீப திருவிழா நடைபெறும்.
கார்த்திகை தீபதிரு விழாவிற்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
தொடர்ந்து தீபதிருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்சரதங்கள் பழுது நீக்கி தேரோட்டத்திற்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.



Leave a Comment