காஞ்சி மகாபெரியவா அருள்மொழிகள்


ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்...

  • நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.
  • பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.
  • மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
  • சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.
  • பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதை காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்



Leave a Comment