கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது?


 

நவராத்திரி திருநாளில் பத்து நாட்களும் , விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து தெய்வத்தின் நாமாவளிகளை பாடி மகிழ்ந்தோம். உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் என பலரையும் அழைத்து உறவுகளையும் மேம்படுத்தும் திருநாளாக அமைந்தது நவராத்திரி பெரு விழா.  இந்துகளின் பண்டிகைகளில் பத்து  நாட்கள் கொண்டாடப்படும் விழாவான  நவராத்திரி கால கட்டத்தில்  நமது  வீட்டில் அனைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது.நம் வீட்டில் வைத்திருந்த கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு எல்லா  அனுக்ரஹங்களும் சர்வ நிச்சயமாக வந்து சேரும்.

 நவராத்திரி திருநாளில் போற்றி வைத்திருக்கும் கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது. இந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.

கொலு பொம்மைகளை பராமரிக்க எளிய வழிகள்

முதலில் கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்குவதற்கு முன் கொலு  படிகளை நன்றாக சரிபார்க்க வேண்டும். கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும்.  கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கொலு பொம்மைகளை அழுத்தி துடைக்ககூடாது.தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் படைத்த  தின்பண்டகளை எடுத்து விட வேண்டும். எலி போன்ற ஜீவ ராசிகள் கொலு படியை தள்ளி விடக்கூடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை.

இப்படி கொலுவை பாதுகாத்த நாம் கொலு முடிந்தவுடன் இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்வது அடுத்த வருடத்துக்கு கொலு வைக்கும் போது எளிதாக இருக்கும்.கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை எழுதிவைத்து கொள்வதும் குழப்பங்களை தவிர்க்க உதவும். அடுத்த வருடம் கொலு வைக்கும்போது நம்மிடம்  இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு பயன்படும்.

.

கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .பெட்டிகளில் பொம்மைகளை அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.

எவ்வளவு ஆர்வத்துடன் கொலு வைக்கின்றோமோ அந்த ஆர்வத்துடனே  பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,

இந்த பராமரிப்பு அடுத்தாண்டு கொலுவை மேலும் சிறப்பிக்கும்.



Leave a Comment