திருத்தணி முருகன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்.....


முருகன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் கிளி வாகனத்தில் கஜவள்ளி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் நவராத்திரி விழா தொடங்கியது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 

நவராத்திரி விழாவில் 100க்கும்மேற்பட்ட கொலு பொம்மைகள் வகைக்கப்பட்டிருந்தன. நவராத்திரி விழாவை முருகன் கோயில் இணை ஆணையர் பழனி குமார், தக்கார் வே.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மாலை, 6.30 மணிக்கு ஊற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

இதே போல், திருத்தணி, சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி விழா இன்று துவங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை, மாலை 6.30 மணிக்கு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.



Leave a Comment