அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது ஏன்? வேறு எதை வாங்கினால் செல்வம் பெருகும்...?


அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு "பொன்னன்" என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அரிதான வேலையை சந்திப்பதை "அலப்ய யோகம்" என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு "அட்சதை" என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு "அட்சய திருதியை" எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

அட்சய திருதியை நாளில் ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். அன்றைய தினத்தில் ஒரு உப்பு  பாக்கெட்டை வாங்கி பூஜை அறையில் வைத்துவிட்டு, அதன் பிறகு பூஜையை துவங்க வேண்டும்.



Leave a Comment