வேறு எங்கும் இல்லாத அதிசயம் இங்கு!


 

வேறு எந்த கோவிலும் காணாத அதிசியம் இக்கோவிலில்

முருகன் என்றாலே,திருச்செந்தூர்,பழனி,திருபரங்குன்றம்,பழமுதிர்ச்சோலை,திருத்தணி,சுவாமி மலை என்ற அறு படை வீடுகள் தான் நம் நினைவுக்கு வரும். அதை தவிர குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். குன்று இருக்கும் இடமெல்லாம் தலம் தோறும் வீற்றியிருந்து. தம்மை நாடி வருவோரின் துயர் தீர்த்து நன்மை அளிக்கிறான் குமரன்.

அத்தகைய சிறப்பு மிக்க முருகன்,பல்வேறு தலங்களில்,பல்வேறு அருட்கோலங்களுடன் காட்சி தருகிறான்.அவற்றுள் முக்கியமான ஒன்றாக விளங்குவது  இரத்தினகிரி.

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது இரத்தின கிரி மலை. இந்த ஐயர் மலையை இரத்தின கிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம், திருவாட்போக்கி மலை ,இதனால் ஐவர் மலை என்றும் அழைப்பார்கள்.இந்த ரத்தின கிரி மலையில் எழுந்தருளியுள்ளதால் இம்மலை உலக புழழ் பெற்றது.

மேலும் இம்முருகன் கோவிலை 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இம்மலையில் முருகன் அருள் பாலிக்கதா இடமே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும்,எதிலும் நிரந்து பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம் அமைந்து இருக்கும் மலையின் மீது,வேறு எங்கும் இல்லதா அதிசியமாக காகங்கள் பறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் இது சனி தோஷ நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது.மேலும் ஒரு அதிசியம் இங்குள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால்,சில மணி துளிகளிலேயே அந்த அபிஷேக பால்,தயிராக மாறி பக்தர்களை அதிசயிக்க வைக்கிறதாம்.



Leave a Comment