சுசீந்திரம் தாணுமாலையன் கோவில், ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா... பால், பன்னீர், அபிஷேகம்...


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில், 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பால், பன்னீர், வெண்ணெய் உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு ஸ்தாணுமாலையன் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் மும்மூர்த்திகள் ஒருங்கே காட்சி தரும் மூலவர் பிரசித்தி பெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு ஸ்தாணுமாலையன் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் மும்மூர்த்திகள் ஒருங்கே காட்சி தரும் மூலவர் பிரசித்தி பெற்றது.

அதே போன்று 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமியும் மிகவும் பிரசித்தி பெற்றவர். இங்கு வழக்கமாக மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

வெற்றிலை மற்றும் முறுக்கு மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவித்து நெய் அபிசேக வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சோடஷ அபிசேகங்கள் நடைபெற்றது.

4

மேலும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கபட்டது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு குமரி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் பெற்றனர். இன்று மாலை வரை தொடர் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது.



Leave a Comment