ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தில் சிறப்பு யாகம்....


விழுப்புரம் ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தில் 14 ம் ஆண்டு தூக்கு விழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டி 5 யாக குண்டங்கள் அமைத்து 51 கலசங்கள் வைத்தும் 108 விளக்கு வைத்தும் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடம் அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு 5 யாகn குண்டங்கள் அமைக்கப்பட்டு 51 கலசங்கள் வைத்தும் 108 விளக்கு வைத்தும் பூஜைகள் செய்து இயற்கை சீற்றங்களை தவிர்க்கவும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் உலக அமைதி வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டிய இயற்கை சீற்றங்களை தவிர்த்து உலக அமைதியாக அமைய வேண்டும் எனவும் தொடர் மழை காரணமாக யாரும் பாதிக்க கூடாது எனவும் பிரார்த்தனை செய்தனர் இந்த சிறப்பு பூஜையில் விழுப்புரம் ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் மற்றும் மாவட்டச் செயலாளர் மூர்த்தி மாவட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பல சித்த பீட பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர்.



Leave a Comment