அர்த்தநாரீஸ்வரறை நாடினால் குடும்பத்தில் சிக்கல் தீரும்!


 

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரர்  இத்திருக்கோவில். அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவராக எழுந்தருளியுள்ள இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் மேலும் சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

தல வரலாறு

    சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்து வந்த ஒருவரின்  தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றிய பொது இச்சிலைகள் கண்டறியப்பட்டது.அதன் பின்  இச்சிலைகள் எல்லாம் ஒரு கிற்று கொட்டகையில் வைத்து மக்கள் வழிபடத் தொடங்கினார்.

நீண்ட காலமாக ஜலத்திலேய வாசம் செய்து வந்ததால் ,ஜலகண்டேஸ்வரர் என்று மற்றறொரு பெயரும் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால்  குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.

 மூலவர் அர்த்தநாரீஸ்வரர்  லிங்க திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த ஆலய மூலவரான சிவ லிங்கத்தின்  ஆவுடையார்,மூன்றரை அடிவிட்டம் என்பது ஆலயத்தின் மற்றொரு தனி சிறப்பாகும்.

லிங்கத் திருமேனியின் பின்புறம் கருவறைச் சுவற்றில் புடைப்புப் சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் உருவம் உள்ளது. இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். சிறிய கருவறையைச் சுற்றி உள்ள  தெற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய லட்சுமி நாராயணப் பெருமாள்  சந்நிதியும், அவருக்கு எதிரே கருடனுக்கு சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில்  ற்கு நோக்கியதெ அம்பாள்    சந்நிதியும், அருகில் நவக்கிரக சந்நிதியும் இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியின் பின்புறம் பைரவர் சந்நிதி உள்ளது.

இத்தலத்தில் உள்ள  ஈசனையும் ,அம்பாளையும் வழிப்பட்டு வந்தால்,கணவன் மனைவிக்கு  ஒற்றுமை  அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் விலகும். இது மட்டும் இன்றி   திருமணப் பேறும் ,குழந்தை பேறும் அமையும் என்பதால்  இத்தல இறைவனை வணங்கும் பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.



Leave a Comment