புரட்டாசி பவுர்ணமியில் பாவங்களை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை....


 

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு உண்மை தான்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்களிலுருந்து விடுபடலாம்.

அதே வேளையில்  புரட்டாசியில் வரும் பவுர்ணமி  நாளில்   சிவ  பெருமானை வழிபடுவது பலவித பாவங்களை போக்கும்  என்பது ஐதிகம்.

அது மட்டும் இன்றி  புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அம்பாளுக்கு கொலு விருந்து  வைத்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்ததால் எழுந்த கோபத்தினால்  அன்னை உக்கிரமாக இருந்தாள்.

அம்பாளை சாந்தம் அடைய செய்வதற்காக பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக  குளிர்ச்சியான  ஒளி பொருந்திய முகத்துடன்  அன்னை காட்சி அளித்தாள்.

 நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்தாள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

 இந்த நாளில் ஈசனை அவரவர் ஆற்றலுக்கு  ஏற்ப வழிபாடு செய்வதால் துன்பங்கள் ஒரு போதும் நெருங்காது  என்பது ஐதிகம்.

பவுர்ணமி நாளில் சிவ பெருமானை காலையில் வழிப்பட்டால்,முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்.பகல் வேளையில் ஈசனை  வழிப்பட்டால் முற்பிறவி மட்டும் இன்றி  இந்த பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும். மாலை நேரம் அதாவது பிரதோஷ நேரத்தில் வழிப்பாடு செய்தால் அனைத்து பிறவிகளிலும் செய்த  அனைத்து பாவங்கள் நீங்கும் என்பது புரட்டாசி பவுர்ணமியின் சிறப்பு அம்சமாகும்.  

 இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

#அதன்_விவரம்_வருமாறு:-

இன்று (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது.

இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

ஓம் நமசிவாய.......

 

 



Leave a Comment