சபரிமலையில் இவற்றுக்கெல்லாம் கட்டணம் உயர்வு... ஏப்ரல் 10 முதல் அமல் 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

‘கட்டண உயர்வு விபரம் வருமாறு:

படி பூஜை - ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000)

சகஸ்ரகலசம் - ரூ. 91,250(80,000)

உதயாஸ்தமன பூஜை - ரூ61,800 (50,000)

உற்சவபலி - ரூ. 37,500(30,000)

களபாபிஷேகம் - ரூ.38,400 (22,500)

தங்க அங்கி சார்த்துதல் - ரூ.15,000(10,000)

புஷ்பாபிஷேகம் - ரூ.12,500 (10,000)

சதகலசம் - ரூ.12,500 (10,000)

 அஷ்டாபிஷேகம் - ரூ.6,000(5,000)

உச்ச பூஜை - ரூ.3,000 (2,500)

பகவதி சேவை - ரூ.2,500(2,000)

உ‌ஷ பூஜை - ரூ.1,500(1000)

கணபதி ஹோமம் - ரூ.375 (300)

கெட்டு நிறைத்தல் - ரூ.300(250)

அபிஷேக நெய் - (100 மி.லி), ரூ.100(75)

நீராஞ்சனம் - ரூ.125(100)

அரவணை - ரூ.100(80)

 அப்பம் 1 பாக்கெட் - ரூ.45(35).

இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.



Leave a Comment