திருச்செந்தூர் சுப்பிரமணிய  சுவாமி கோயிலில்  மார்கழிமாத  பூஜை விபரம்.... 


தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி ஜனவரி 13-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய  சுவாமி கோயிலில்  அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி (திங்கள்கிழமை) அன்று மட்டும் கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.



Leave a Comment