சாஸ்திரங்கள் கூறும் துளசியின் மகிமை


துளசியின் நிழலும் முக்தியைத் தரும் யமனை ஓதுக்கி விடும். ஜட வாழ்க்கையின் துயரங்களை நீக்கும். துளசியின் நிழல் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இறப்பில் இருந்து முக்தி கிடைக்கும். எந்த தானத்தாலும் இத்தகைய முக்தியை அடைவது அரிது.

துளசி வளர்க்கப்படும் வீடு, புனித நீராடும் ஸ்தலம் போல் புனிதமாகிறது.  அங்கு யம தூதர்கள் வருவதில்லை. ஆயிரம் பாவங்கள் கொண்டவனாக இருந்தாலும், துளசியைக் கையில் வைத்திருந்தவாறு உயிரை விடுபவனை யமனால் காண இயலாது.

1.ஏகாதசி விரதம்   

2.பகவத் கீதை   

3.கங்கை நீர்    

4.துளசியை வாயில் இடல்   

5.சராணாமிருதம்   

6.ஹரி நாமம்   

இந்த ஆறும் இறப்போருக்கு முக்தியை அளிக்கும்.
 



Leave a Comment