ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்....


ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடத்தப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். மேலும், மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும்.

8-ம் தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சந்நதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

14-ம் தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. 15-ம் தேதி தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ம் தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடைபெறும்.



Leave a Comment