சபரிமலை புதிய கொடிமரம் 25ஆம் தேதி பிரதிஷ்டை


சபரிமலை ஐயப்பன் கோவிலில் 25-ந்தேதி கொடிமரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதிய கொடி மரம் சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கொடி மரத்திற்கு விசே‌ஷ பூஜைகள் நடக்கின்றன. பிரசாத சுத்திகரிப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. வருகிற 22-ந்தேதி சகஸ்கர கலச பூஜை, ஜல பூஜை, 23-ந்தேதி கலச பூஜை, 24-ந்தேதி களபாபிஷேகம் போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து 25-ந்தேதி காலை 11.50 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேளையில் கொடி மரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது.



Leave a Comment