அரச மரத்தை சுற்றும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்.....


மூலதோ ப்ரம்ம ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபாய
அக்ரதோ சிவ ரூபாய அஸ்வத்தாய நமே நமஹ.

என்று உச்சரிக்க வேண்டும். இல்லை என்றால்.....

ஓம் அஸ்வத்தாய நமஹ
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமசிவாய

என்று உச்சரிக்க வேண்டும்

முக்கிய குறிப்பு

அரச மரத்தை தினமும் காலையில் ப்ரம்ம முகூர்த்தத்தில் அதாவது அதிகாலை 4:00  மணி முதல் 6:00 மணி வரை இருக்கும் நேரத்தில் தேவாதி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். நீங்கள் ப்ரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்.

அதுவும் அமாவாசை பெளர்ணமி திருவோணம் ரோகிணி புனர்பூசம் திருவாதிரை நட்சத்திரத்திர தினத்தில் அளவில்லாத பலனை தரும். அரசமரத்தை மாலை 5:00 மணிக்கு மேல் சுற்ற கூடாது. இதிலும் கர்மா குறைவாக இருக்கும் பட்சத்தில் உடனேயே பலன் கிடைக்கும்.
 



Leave a Comment