ஜாதகத்தில் சனி, ராகு, கேது தோஷம் தாக்கம் குறைய....! இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்.... 


ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  முடிந்தவரை நேர்மையாக இருந்துவிட்டால், சனிபகவானால் உண்டாகக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இதோடு சேர்த்து கட்டாயம் இறைவழிபாடும் நமக்கு அவசியம் தேவை.

 ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். 
ஹனுமனின் மூல மந்திரம் இதோ!

" அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்  

குமாரம் ப்ரும்ஹ சாரிணம் 

துஷ்ட க்ரஹ வினாசயா 

ஹனுமந்த முபாஸ் மஹே! "

தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள் எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது. 



Leave a Comment