சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15 ஆம் தேதி திறப்பு.... 


மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15-ஆம் தேதி திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்று அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20 வரை மகர விளக்கு பூஜைக்கு, நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26-ஆம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடைபெறும் என்றும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 5 நாட்கள் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பேருக்கும், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தினத்தன்று 5000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 



Leave a Comment