திருப்பதியில் கூடுதலாக 3000 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் மேலும்  3 ஆயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள டிக்கெட் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

தற்போது ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்கள் என 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் மூன்று ஆயிரம் டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வந்ததை 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்ட்டிற்கு பதிலாக ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3000 டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக தினந்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசனத்தில் 13,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment