மயிலாப்பூர் அருள்மிகு கற்பகம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை காண.... 


தொண்டை மண்டலத்தில் அமைய பெற்ற சிவ திருத்தலங்களில் முதன்மையானதும் , மூர்த்தி, கீர்த்தி, தீர்த்தம் ஆகிய மூவற்றிலும் புகழ் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றாகவும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகவும், பார்வதி தேவியார் மயிலுருவில் சாப விமோச்சனம் பெற்று உமா மகேஸ்வரன் உமா தேவியை திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகவும் விளங்கும்,  சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வைகாசி  பௌர்ணமி நாளான 05-06-2020 அன்று வெள்ளி கிழமை இரவு 8.00 - 9.30 மணிக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெறவுள்ளது. 

மேற்படி திருக்கல்யாண வைபவத்தை நேரலையாக http://tnhrce.gov.in மற்றும் http://mylaikapaleeswarar.tnhrce.in இணையதளத்திலும் மற்றும்
  http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE youtube சேனலிலும் கண்டு அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் பெருமானின் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Leave a Comment