பொறையுடைமை - பழி வாங்காமலிருப்பது சிறந்த பண்பு (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் 
தறனல்ல செய்யாமை நன்று 
மு.வ விளக்க உரை: 
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது 
கலைஞர் விளக்க உரை: 
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்



Leave a Comment