அழுக்காறாமை - யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின் 
மு.வ விளக்க உரை: 
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை. 
கலைஞர் விளக்க உரை: 
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை



Leave a Comment