பிறனில் விழையாமை - உலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர் யார்? (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறற்குரியாள் தோள்தோயா தார் 
மு.வ விளக்க உரை: 
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர் 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே 
கலைஞர் விளக்க உரை: 
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்



Leave a Comment