ஒழுக்கம் உடைமை - உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு 
மு.வ விளக்க உரை: 
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை. 
கலைஞர் விளக்க உரை: 
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது



Leave a Comment