சென்னையில் 42 அடி உயரத்தில் முருகன் சிலை....
சென்னை திருவொற்றியூர் அடுத்த ஜோதி நகர் பகுதியில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய பஞ்சாயுதனேஸ்வரர் ஆலயத்தில் கடந்த டிசம்பர் மாதம் புதியதாக 42 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷகம் நடைப்பெற்றது.
சென்னையில் உள்ள கோவில்களில் முதல் முறையாக 42 அடி உயரத்தில் முருகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பத்துமலை முருகன் சிறப்பை பெற்றது போல் சென்னையிலும் பால சுப்பிரமணியர் கோவிலில் 42 அடி உயர முருகன் சிலையும் சிறப்பு பெற்றது.
மேலும் உலக நன்மைக்காகவும் மக்கள் சிறப்புடன் வாழ்வதற்காக வழிபட அமைக்கப்பட்ட முருகர் சிலை ஆனது 48 நாட்கள் பூஜை நிறைவு பெற்று தை கிருத்திகை தினமான இன்று மூலவர் முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனுக்கு அரோகரா என்று கோஷங்களுடன் வழிபட்டனர்





Leave a Comment