திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு சர்க்கரை பால் பிரசாதம்.....


ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  இனி செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு சர்க்கரை பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்து  பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

இக்கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது இல்லை. அதற்கு பதிலாக மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது அதேபோல திருப்பரங்குன்றம் கோயிலிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தோறும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்து காய்ச்சிய பால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பால் கொண்டு வருகின்றனர். அந்த அபிஷேகம் செய்த பாலை  பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்ட பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காய்ச்சிய பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 



Leave a Comment