திருப்பதியில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வி.ஐ.பி. தரிசனம்... இதோ ஒரு வழி


ஒரு பக்தர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

இதற்காக www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற லிங்க் மூலமாக ரூ 10 ஆயிரம்  நன்கொடை செலுத்தி ரூ 500 விஐபி டிக்கெட்டுகளை பெறலாம்.

நேரடியாக திருமலைக்கு வந்தாலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விஐபி டிக்கெட்டுகளை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் அனைத்து பக்தர்களும் விஐபி தரிசனத்தில் செல்லவேண்டும் என்பதே இந்த திட்டம்.

ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு 500 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 



Leave a Comment