திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை.....


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்தது.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் மண்டபத்தில் இன்று நடந்தது.  இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில் இன்று நடந்தது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். 

மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கையில் இரண்டு கோடியே 47லட்சத்து 8ஆயிரத்தி 274 ரூபாய் மொத்தம் கிடைத்தது. இதில் தற்கால உண்டியலில்24,443ம் கோசாலை உண்டியலில் ரூ.1இலட்சத்து 81ஆயிரத்து 355ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.73 ஆயிரத்து 571 ரூபாவும் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 79ஆயிரத்து 713ம், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10 ஆயிரத்து 011ம் அடங்கும். 

மேலும் தங்கம் 3,035 கிராம், வெள்ளி 20, 855 கிராம் கிடைத்தது. இதில் வெளிநாட்டு கரன்சி தாள்கள் 306 காணிக்கையாக கிடைத்தன.



Leave a Comment