சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு


நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்ககு அருள்பாலித்தார்.       திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16 ந்தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக அம்மன் காமதேனு வாகனம், முத்து பல்லக்கு,தெப்பத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிலையில் சித்திரை தேரோட்டத்தின் நிறைவு  நாளான  இன்று மாலை அம்மனுக்கு அபிஷேகம் கண்டருளி இரவு  தங்க கமல வாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மூலஸ்தானம் சென்றடைந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இவ்விழாவினை  கோயிலின் இனை ஆணையர் அசோக்குமார், அலுவலக பணியாளர்கள்,கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 



Leave a Comment