ஆனந்த சாயிபாபா திருக்கோயிலின் கும்பாபிஷேக வீடியோ ....


ஆவடி அருகே ஆனந்த சாயிபாபா திருக்கோயிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாயிபாபா திருக்கோயில். இங்கு திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர், கடன் பிரச்சனைகளில் உள்ள அனைவருக்கும் தீர்வும் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் கொண்ட கோவிலாகும். இந்த கோவிலின் 5 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

ஆலய நிறுவன தலைவர் ரமேஷ் மைனாவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் மற்றும் அஸ்வத் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
 



Leave a Comment