தியாகராஜசுவாமி  கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் 


பூலோகம் கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிதிருகோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி , வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம்   ஆண்டு தோறும் மாசிமாதம் நடைபெறுகிறது. 

இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன்  வாத்தியங்கள் ஒலிக்க  வெகு விமரிசையாக  கொடியேற்றப்பட்டது
 10 ம் தேதி முதல் தொடங்கப்படும் மாசி உத்சவம் 20 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என  தினதோரும்  பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் 16 ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

 இதனையடுத்து 18 ம் தேதி ஒன்பதாம் நாள் திங்கட்கிழமைகல்யாண சுந்தரர்  சங்கிலி நாச்சியார்  திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது இதற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்
 



Leave a Comment