திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை....


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று முதல் 12-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் தினம் தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி, திங்கள்கிழமை காலை 8 முதல் மதியம் 12 மணி வரை திருச்சானூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் மண்டபத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் லட்ச குங்குமார்ச்சனையை நடத்தினர். குங்குமார்ச்சனை நடத்துவதால் வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம்.



Leave a Comment