திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் கொடியேற்றம்


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்தாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

நவ.22ம் தேதி பட்டாபிஷேகமும், முக்கிய நிகழ்ச்சியாக நவ.23ம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுதலும் நடைபெறுகிறது. நவ.24ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். '''திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.



Leave a Comment