திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்


பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.


இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.


தொடர்ந்து, இன்று காலை கமல வாகனத்தில் சுவாமி - அம்மன் வீதி உலா நடைபெற்றது. 26இல் சிம்ம வாகனத்திலும், 27இல் ரிஷப வாகனத்திலும், 28இல் இந்திர வாகனத்திலும், 29இல் யானை வாகனத்திலும், 30இல் காமதேனு வாகனத்திலும், 31இல் கிளி வாகனத்திலும், நவ. 1ஆம் தேதி பூம்பல்லக்கிலும் சுவாமி-அம்மன் வீதியுலா வருவர்.

திருவிழாவின் சிகர நிகழ்வாக நவ. 3ஆம் தேதி திருகல்யாணம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.



Leave a Comment