புத்திர பிராப்தி அருளும் குருந்தை மலை முருகன்!


கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பாதையில் 28 கி.மீ. தொலைவிலுள்ள காரமடையிலிந்து அத்திக்கடவு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. குருந்தை மலை முருகன் கோவில். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக காட்சியளிக்கிறார்.650 வருடங்கள் பழமையான இக்கோவிலில் உள்ள முருகன் பழனி கடவுள் போல மேற்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இம்மலைக்கு தெற்கே சஞ்சீவ மலையும், வடக்கே பகாசுரன் மலையும் உள்ளன. கீழே ஆரவல்லி, சூரவல்லி வசித்த கோட்டைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கம்பீர தோற்றத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து இடும்பன் சன்னதியும், நாக தீர்த்தம், மயில் தீர்த்தம் உள்ளன. ஸ்தல விருட்சமாக குருந்த மரம் இருப்பதால் இம் மலையில் வாழும் முருகனுக்கு குருந்த மலை முருகன் என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் அகஸ்தியர், அனந்தன் என்ற சர்ப்பம் சூரியன் வணங்கி, முருகனின் அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

இக்கோவிலின் எதிரே கஜபுஷ்கரணி உள்ளது மற்றும் அனுமன் சுனை, அனுமன் கோயில் உள்ளது.அனுமன் மலையை தாவும் பொழுது, இங்கு ஒரு காலும், மற்றொரு மலையான சஞ்சீவி மலையிலும் ஒரு கால் வைத்ததாக ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பிராப்தி கிடைக்கும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.



Leave a Comment