மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு


மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற் கொள்வார்கள். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச் சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வருகின்ற திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும்.

இதில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அப்போது மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித் வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.

நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர். 7-ம் நாள் அன்று இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டு திருவிழா வாகும்.



Leave a Comment