பேரம்பாக்கம் ஸ்ரீ மந்தைவெளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மந்தைவெளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  வேண்டிய வரம் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் , உலகில் பல அவதாரங்களாகி சக்தி உருவமாய் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமந்தைவெளியம்மன் அம்பிகைக்கு புனராவர்தன ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று அம்மன் கரிகோலம் மற்றும் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, சக்தி ஹோமமும் நடைபெற்றது. அதே போல் இரவு அம்மனுக்கு நேத்திரபூஜை, பிரம்மச்சாரி பூஜையும், கன்னி பூஜையும் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து இன்று காலை சண்டி ஹோமம் மற்றும் மஹா லஷ்மி ஹோமம், தம்பதியர் யாகமும் நடைபெற்றது. அதனையடுத்து ஹோமம் செய்த  கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.  கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் பேரம்பாக்கம், மப்பேடு,கொண்டஞ்சேரி, சத்தரை, வேப்பஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 



Leave a Comment