திருப்புலிவனம் கோவிலில் சிம்ம தட்சிணாமூர்த்தி


திருப்புலிவனம் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார்.

இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் அருகில் சனாகதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது.

செங்கல்பட்டுக்கு அருகே, உத்திரமேரூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் அருகேயுள்ள தலம். இங்கு தட்சிணா மூர்த்தியின் காலடியில் முயலகனுக்கு பதிலாக சிம்மம் உள்ளது.

இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு ‘சிம்ம குரு தட்சிணாமூர்த்தி’ என்றே பெயர். சிம்ம ராசிக்காரர் களுக்கு பரிகாரத் தலமாகவும் இது விளங்கி வருகிறது.



Leave a Comment